search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் விலை உயர்வு"

    • சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
    • சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த மாதம் வரை மழை மற்றும் பனி காரணமாக காய்கறிகள் வரத்து சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறி களுக்கு போதிய விலை கிடைக்க வில்லை. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதா லும் முகூர்த்த நாட்கள் வருவதாலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தை போலவே கேரளாவிற்கும் காய்கறிகள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் (கலர் காய்) ரூ.60க்கும், பச்சை கத்தரி ரூ.100க்கும் விற்பனையாகிறது. தக்காளி ஒரு பெட்டி ரூ.400, வெண்டை ஒரு கிலோ ரூ.50, புடலங்காய் ரூ.30, சுரைக்காய் ரூ.20, பூசணிக்காய் ரூ.20, அவரை ரூ.80, கொத்தவரக்காய் ரூ.30, முருங்கை ரூ.80, சம்பா பச்சை மிளகாய் ரூ.30, உருண்டை மிளகாய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.80, பல்லாரி ரூ.60, கருணை க்கிழங்கு ரூ.60, சேனை க்கிழங்கு ரூ.60 என விற்பனையாகிறது.

    மார்க்கெட் விலை யிலேயே இந்த நிலவரம் என்றால் சில்லரை க்கடைகளில் இதை விட சற்று கூடுதலாகவே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்து ள்ளனர். சபரிமலை சீசன் முடியும் வரை காய்கறிகள் விைல குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளான காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, கொசவபட்டி, அம்பி ளிக்கை, கள்ளிமந்தையம், கேதையரும்பு, இடைய கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இங்கிருந்து ஒட்டன்ச த்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆயுதபூஜை, பொங்கல் மற்றும் பூஜை நாட்களில் அர்ஜூனா பூசணிக்காய் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து மகாராஸ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வெளி மாநில வியாபாரிகள் வராததால் பூசணிக்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    வழக்கமாக 1 கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விலை கேட்கப்படும். ஆனால் தற்போது ரூ.7க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுதவிர மற்ற காய்கறிகளின் வலை கனிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.25க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது. ரூ.15க்கு விற்கப்பட்ட பல்லாரி ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கரும்பு முருங்கை ரூ.70, மர முருங்கை ரூ.45, செடி முருங்கை ரூ.60, வெண்டை க்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.25, கல்லாமை மாங்காய் ரூ.65, உருட்டு மாங்காய் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.55, பீன்ஸ் ரூ.45 என்ற விலையில் விற்பனையானது.

    20 கிலோ பை பச்சை கத்தரிக்காய் ரூ.400, வெள்ளை கத்தரிக்காய் ரூ.500, கலர் கத்தரிக்காய் ரூ.550, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இனிவரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
    • கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    கோவை:

    கோவை மாநகரில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நீலகிரியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

    டி.கே.மார்க்கெட்டில் சாதாரண நாட்களில் கேரட் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாது. தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ கேரட் ரூ.90க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.90, பீன்ஸ்-80, மிளகாய்-ரூ.50, பீட்ரூட்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, குடைமிளகாய்-ரூ.50, பாகற்காய்-ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அவரை-ரூ.60, கத்தரிக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, மொச்சை-ரூ.55, புடலங்காய்-ரூ.45, கோவக்காய்-ரூ.45, சுரைக்காய்-ரூ.50, இஞ்சி-ரூ.40, சேப்பக்கிழங்கு-ரூ.50, சேனை கிழங்கு-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.50, தக்காளி-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.30, எலுமிச்சை-ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.

    மார்க்கெட்டுகளை தவிர்த்து அங்காடிகளில் இதை விட காய்கறிகள் விலை அதிகமாக இருந்தது. காரட் ரூ.110, பீன்ஸ் 95, பீட்ரூட் ரூ.75-க்கு விற்பனை ஆனது.

    மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 10 மூட்டை காய்கறிகள் வர வேண்டிய இடத்தில் பாதிக்கு பாதியாக 5 மூட்டை காய்கறிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 3 மாத காலமாகவே காய்கறிகளின் விலை சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.

    தற்போது தான் மழை குறைந்து, மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் காய்கறி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது காய்கறியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கோவை உக்கடம் மொத்த மீன் சந்தை, சில்லறை மீன் சந்தைகளில் நேற்று விற்பனை மந்தமாக காணப்பட்டது. விற்பனை குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்து விட்டது.

    கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், செல்வபுராம், சரவணம்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நுகர்வு குறைவால் இறைச்சி விலையும் குறைந்தது.

    கடந்த வாரங்களில் ரூ.270க்கு விற்ற 1 கிலோ கோழி இறைச்சி ரூ.70 குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டிறைச்சி 1 கிலோ ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.

    புரட்டாசி மாதம் முடியும் வரை இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்றும் இதனால் விலை 50 சதவீதம் அளவுக்கு குறையும் எனவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×